search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் கைது"

    • இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்
    • அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது

    வேலூர்:

    வேலூர் கஸ்பாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த ஒருவரை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் அந்தப் பெண்ணை, கணவர் தனது மதத் திற்கு மாறிவிடுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் மனைவியை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகி ன்ற நிலையில் மனைவியின் வீட்டுக்கு வந்த கணவர் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி ஆடைகளை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.
    • படுகாயம் அடைந்த அவர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்ப ட்டார்

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி (வயது37). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும் சின்னாளபட்டியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நிலக்கோ ட்டையில் பாண்டீஸ்வரி வீட்டுக்கு வந்த கணேசன் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி ஆடைகளை பிடித்து இழுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

    படுகாயம் அடைந்த அவர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைகாக சேர்க்கப்ப ட்டார். இதுகுறித்து நிலக்கோ ட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெ க்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • மாங்கனி சத்தம் போடவே 4பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
    • கொலை முயற்சி சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் முரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 38). இவர் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி மாங்கனி (35). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் மணிமாறனுக்கும் அவரது கம்பெனியில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    இதையறிந்த மணிமாறன் தனது கள்ளக்காதலியின் திருமணத்தை நிறுத்த முடிவு செய்தார். இதற்காக அந்த இளம்பெண்ணுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு, கள்ளக்காதலி குறித்து தவறான தகவல் எழுதி மொட்டை கடிதம் ஒன்றை அனுப்பினார்.

    அந்த கடிதத்தை மணிமாறன் வீட்டில் வைத்து எழுதினார். அப்போது கடிதத்தில் தவறு ஏற்பட்ட போது அந்த கடிதத்தை கசக்கி வீட்டிலேயே போட்டுள்ளார். அதனை மணிமாறனின் மனைவி மாங்கனி எடுத்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.

    உடனே இதுகுறித்து தனது கணவரிடம் கேட்டதுடன், இளம்பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறும் எச்சரித்தார். இருப்பினும் மணிமாறன் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டார்.

    மேலும் தனது கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கு தெரிந்து விட்டதால் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்கள் 4 பேரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் மணிமாறனின் மனைவியை கொலை செய்ய ஒப்புக்கொண்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று இரவு மாங்கனி வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது மணிமாறனின் நண்பர்கள் 4பேரும் வீட்டிற்கு வந்தனர். வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் மணிமாறன் உள்ளே வரவழைத்தார். பின்னர் மாங்கனி தூங்கி கொண்டிருந்த அறைக்குள் சென்ற 4 பேரும் தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றனர்.

    மாங்கனி சத்தம் போடவே 4பேரும் கொலை முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு மூலக்காரணம் தனது கணவன் மணிமாறன் என்பது தெரியவரவே இது குறித்து மாங்கனி ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி மணிமாறன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை கைது செய்தனர். கள்ளக்காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஜான்சிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாயிலிருந்து நுரை தள்ளியது.
    • ஜான்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாதவத் தருண் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜான்சி(20) இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    ஜாதவத் தருண் தனது மனைவியுடன் ஐதராபாத்துக்கு குடி பெயர்ந்தார். ஐ.எஸ். சதன் பிரிவில் உள்ள காஜாபாக்கில் அவர்கள் வசித்து வந்தனர்.

    தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் ஜான்சிக்கு கடந்த ஏப்ரல் 16-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு கணவன், மனைவி இருவரும் தனிமையில் இருந்தனர்.

    அப்போது ஜாதவத் தருண் ஜான்சியை உல்லாசத்திற்கு அழைத்தார். குழந்தைகளை கவனித்ததால் உடல் சோர்வாக உள்ளது எனக் கூறிய ஜான்சி மறுப்பு தெரிவித்தார்.

    ஆனாலும் மனைவியை தொடர்ந்து வற்புறுத்தினார்.

    ஜான்சி மறுத்ததால் அவரிடம் அத்துமீற தொடங்கினார்.

    இதனால் ஜான்சி கத்தி கூச்சலிட்டார். சத்தம் வெளியே கேட்காமல் இருக்க ஜாதவத் தருண் தனது மனைவியின் வாயை கையால் பொத்தினார். அப்போது மூக்கையும் சேர்த்து அழுத்தினார்.

    இதனால் ஜான்சிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாயிலிருந்து நுரை தள்ளியது. அவர் சுயநினைவை இழந்தார். இதனை கண்டு திடுக்கிட்ட ஜாதவத் தருண் பதறியடித்தபடி வெளியே ஓடி வந்தார்.

    இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக ஓவைசி மருத்துவமனைக்கு ஜான்சியை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜான்சி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாக சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜான்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது மனைவி திடீரென இறந்து விட்டதாக ஜாதவத் தருண் தெரிவித்தார். ஆனால் ஜான்சியின் பெற்றோருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து ஜான்சியின் தந்தை சைதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் ஜான்சி மூச்சுத்திணறல் காரணமாக இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தருணை அழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் ஜாதவத் தருணை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வீட்டை விட்டு விரட்டி இருக்கின்றனர்.
    • இலாகி உள்ளிட்ட 9 பேரும் சேர்ந்து மாஜிதாவை கொலை மிரட்டல் விடுத்த தாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் இலாகி (வயது 53). இவரது மனைவி மாஜிதா (45). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதுவரை குழந்தை இல்லை. இந்த நிலையில் மாஜி தாவை அவரது கணவர் இலாகி மற்றும் கொழுந்த னார் கலீம் (50), கலிம் மனைவி ஷர்மிளா, நஜு புதீன் மனைவி மலிகா, சாதிக் பாஷா மனைவி பர்வீன், ஜாபீர் என்கிற ஜாபர், சாதிக்பாஷா ஷாஹேர் மற்றும் இலாகி யின் 2-வது மனைவி பரிதா ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கொடுமைப்படுத்தி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி வீட்டை விட்டு விரட்டி இருக்கின்றனர்.

    இந்த நிலையில் மாஜிதா சம்பவத்தன்று தனது வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லும்படி கணவர் மற்றும் அவரது குடும்பத்தி னரிடம் நியாயம் கேட்டி ருக்கிறார். இதனால் ஆத்திர மடைந்த அவரது கணவர் இலாகி உள்ளிட்ட 9 பேரும் சேர்ந்து மாஜிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாஜிதா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதிகா, மனைவியை கொடுமைப் படுத்திய கணவர் இலாகி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கணவர் இலாகியை கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
    • போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

    வடவள்ளி:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20).

    இவர் கோவை பேரூரில் உள்ள தமிழ்க்கல்லூரியில் பி.காம் சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது இவருக்கும், அதே கல்லூரியில் படித்த மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு காதல் ஏற்பட்டது.

    2 பேரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6-ந்தேதி வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவருடன் அவரது வீட்டில் ரமணி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் 29-ந்தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காருண்யா நகர் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இதற்கிடையே பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பதால், அவரது சாவுக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெண்ணின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பேரூர் டி.எஸ்.பி. ராஜ பாண்டியன் பெண்ணின் கணவர் சஞ்சய், அவரது தந்தை, தாய், ரமணியின் தந்தையிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

    சஞ்சயிடம் நடத்திய விசாரணையின் போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் அதிகரிக்கவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதையும், தனக்கு தாய், தந்தை உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    போலீசாரிடம் சஞ்சய் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், ரமணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கல்லூரியில் படிக்கும் போதே, என்னுடன் படித்த மற்றொரு மாணவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ரமணியை காதலித்த போதே, அந்த பெண்ணுடனும் பேசி வந்தேன். இந்த பழக்கம் திருமணத்திற்கும் பிறகும் நீடித்தது. அடிக்கடி அவருடன் நான் செல்போனில் பேசி வந்தேன்.

    இது முதலில் ரமணிக்கு தெரியாமல் இருந்தது. திருமணம் முடிந்த பின்னர் நான் செல்போனில் அடிக்கடி பேசுவதால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் நான் அந்த பெண்ணுடன் பேசுவதும் அவருக்கு தெரிந்து விட்டது. இதனை அவர் கண்டித்தார்.

    ஆனாலும் நான் தொடர்ந்து பேசி கொண்டிருந்தேன். இதனால் எங்களுக்கு திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நான், அந்த பெண்ணிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இதனை எனது மனைவி ரமணி பார்த்து விட்டார்.

    இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், ரமணியை அடித்து உதைத்து, கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளினேன்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத நான், வீட்டில் இருந்த அவரது துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை கட்டி இறுக்கினேன்.

    இதில் சிறிது நேரத்தில் ரமணி துடிதுடித்து இறந்து விட்டார். இதுகுறித்து எனது தாய், தந்தைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினேன்.

    அவர்கள் வந்த பின்னர் இதில் இருந்து தப்பிப்பதற்காக 3 பேரும் சேர்ந்து ரமணி தற்கொலை செய்து கொண்டது போல காண்பிக்க திட்டமிட்டோம்.

    உடனே அவரை தூக்கி வைத்து துணிகளை கழற்றி விட்டு, வீட்டில் சமைப்பதற்கு வைத்திருந்த மஞ்சள் பொடியை எடுத்து ரமணியின் உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்தோம். பின்னர் மாற்று துணியை கட்டி விட்டு, ஏற்கனவே வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து வாயில் ஊற்றினோம். இதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தோம்.

    அவர்களும் ஓடி வந்து, புளியை வாயில் கரைத்து ஊற்றினர். பின்னர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ரமணியை கொண்டு சென்றோம். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூறினர்.

    இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்ற போது, ரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் இறந்து விட்டது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல காட்டி கொண்டோம்.

    போலீசார் விசாரித்த போதும், சாணிப்பவுடர் குடித்து விட்டார் என்றே தெரிவித்தோம். காயம் குறித்து கேட்டபோது மழுப்பலான பதிலேயே தெரிவித்து வந்தோம்.

    இருந்த போதிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதால் நான் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் புதுப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகம் ஆடிய அவரது கணவர் சஞ்சய் மற்றும், அவருக்கு உடந்தையாக இருந்த சஞ்சயின் தந்தை லட்சுமணன், தாய் அம்முகுட்டி என்ற பக்ரு நிஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • குப்தாவின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையினர் ரூ.10 லட்சம் கேட்டனர்.
    • குப்தாவின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையினர் ரூ.10 லட்சம் கேட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி, ரஜோரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குப்தா (வயது 71). இவரது மகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குப்தா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்த பின்பு அந்த பெண் குப்தாவின் மகனை கவனிக்க மறுத்தார். மேலும் குடும்பத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தினார். இதனால் குப்தா மனம் உடைந்தார். அவர் 2-வது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

    இதற்காக 2-வது மனைவியிடம் பேச்சு நடத்திய போது அவர் குப்தாவுக்கு விவாகரத்து கொடுக்க தனக்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றார். இதனை கேட்ட குப்தா ஆத்திரம் அடைந்தார்.

    இதையடுத்து குப்தா மனைவியை கொலை செய்து விட முடிவு செய்தார். இதற்காக கூலிப்படையை அமர்த்த ஏற்பாடு செய்தார். அதன்படி டெல்லியை சேர்ந்த விபின், ஹிமாண்டி ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்கள் குப்தாவின் மனைவியை கொலை செய்ய ரூ.10 லட்சம் கேட்டனர். அவர்களுக்கு முன்பணமாக ரூ. 2.40 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படையினர், குப்தாவின் 2- வது மனைவியை கொலை செய்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குப்தாவை கைது செய்தனர். அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினர் விபின், ஹிமாண்டி ஆகியோரும் பிடிப்பட்டனர். அவரகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தர்மய்யா இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரில் உள்ள அக்கா நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • ஆந்திரா மாநிலம் புரட்டிரெட்டி கண்டிகை பகுதியில் பதுங்கி இருந்த தர்மய்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள புட்டிரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தர்மய்யா. கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 22). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் தர்மய்யா தனது குடும்பத்துடன் தங்கி காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 23-ந் தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தர்மய்யா இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரில் உள்ள அக்கா நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த தர்மய்யாவிடம் அக்கா நிர்மலா மனைவி எங்கே என்று கேட்டார். அப்போது மனைவியை அடித்து கொலை செய்து மாந்தோப்பிலேயே புதைத்து விட்டதாக போதையில் கூறி உள்ளார்.

    இதுபற்றி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதிரிவேடு மாந்தோப்பு பகுதியில் தோண்டிப்பார்த்தபோது அழுகிய நிலையில் பெண் பிணம் இருப்பது தெரிய வந்தது.

    விசாரணையில் அது தர்மய்யாவின் மனைவி லட்சுமி என்பது தெரிய வந்தது. மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தர்மய்யாவை தேடிவந்தனர். அவர் ஆந்திரா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரயா சக்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் மற்றும் தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலத்திற்கு விரைந்து சென்று அவரை தேடி வந்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் புரட்டிரெட்டி கண்டிகை பகுதியில் பதுங்கி இருந்த தர்மய்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து பாதிரிவேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று மதியம் ரஞ்சித் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த ரஞ்சித் சுத்தியலை எடுத்து மனைவி ேராஜாவின் தலையில் அடித்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த மாதரசனப்பள்ளி அருகே உள்ள செம்மண் குழி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது30), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோஜா (29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே மனைவியின் நடத்தையில் ரஞ்சித் சந்தேகப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரோஜா கணவரை பிரிந்து தனது நல்லகான கொத்தப்பள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு குழந்தை களுடன் சென்று வசித்து வந்துள்ளார்.

    நேற்று மதியம் ரஞ்சித் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்

    அப்போது மீண்டும் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் சுத்தியலை எடுத்து மனைவி ேராஜாவின் தலையில் அடித்தார்.

    இதில் படுகாயமடைந்த ரோஜா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து உடலை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்று ரஞ்சித் சரணடைந்தார்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டிய வீட்டில் கிடந்த ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் வாக்குமூலம் கூறியதாவது, எனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை நான் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தேன் என்று கூறினார்.

    பின்னர் கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி சாவடி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). போளூர் அரசு ஆண்கள் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயந்தி (50), இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர்.

    முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

    அதிகாலையில் முருகன் கண்விழித்தார். அவர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி ஜெயந்தியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கினார். இதில் ஜெயந்தி துடிதுடித்து இறந்தார்.

    இதனையடுத்து முருகன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

    இது சம்பந்தமாக தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரணடைந்துள்ள முருகனிடம் கடலாடி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • கணவன், மனைவி இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள தொட்ட திம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவபிரியா (வயது 25).

    இவருக்கும் விஜய் என்பவருக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

    இந்நிலையில் 2-வது திருமணம் செய்து கொண்ட விஜய் தாங்கள் ஏற்கனவே வசித்து வந்த வீட்டின் சாவியை தர சொல்லி கேட்டு சிவபிரியாவிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.

    இது குறித்து சிவபிரியா கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
    • சுமதி கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு அடிக்கடி சண்டை போடுவார்.

    நெல்லை:

    ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு சுமதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆலங்குளம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கு சுமதி நேற்று மாலை சாமி கும்பிட வந்துள்ளார். சிறிது நேரத்தில் கணவர் கண்ணனும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தினுள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அருகில் கிடந்த ஊஞ்சல் கம்பியை எடுத்து சுமதியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

    நானும், எனது மனைவியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனக்கு ஆலங்குளம் அருகே சாலைபுதூர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சுமதி, என்னிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கண்டித்ததோடு, அடிக்கடி என்னிடம் சண்டை போடுவார்.

    ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை என்னுடன் வீட்டில் வைத்து சண்டை போட்டுவிட்டு சுமதி கோவிலுக்கு சென்றாள். அங்கு நானும் சென்று வாக்குவாதம் செய்தேன். அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் நான் அவரை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×